பிராம்மணர்கள் ஜாதக பரிவர்த்தனை சேவை
- brahminshoroscopeexchange.com
- Brahmins Horoscope Exchange Service
Email: brahminshoroscopeexchange@gmail.com
| IMPORTANT NOTICE FOR ALL VIEWERS AND CUSTOMERS |
|
Marriages are made Here |
|
OUR SERVICE - எங்கள் சேவை
ATTENTION BRAHMIN BOYS AND GIRLS
GET YOUR HOROSCOPE AND PROFILE PUBLISHED ALONG WITH A PHOTOGRAPH JUST FOR A ONE TIME FEE OF RS. 200/ (RUPEES TWO HUNDRED ONLY).The horoscope and other details can be viewed by all brahmin families without any restriction with a view to make the same known to many.
Our matrimonial service is limited to publication of profiles of Brahmin boys and girls only.
Eligible Brahmin Boys and girls can submit their profiles containing the biodata and horoscope for publishing in the website via email or by post through the
or the form of your own along with a photograph of each boy or girl.
The form can also be obtained, filled up and submitted at any of our
along with the prescribed charges.
DETAILS OF CHARGES FOR THE SERVICE - சேவைக்கான கட்டண விவரம்
The Registration charges including the charges for publishing the biodata and horoscope of a person are Rs. 200/- (Rupess Two Hundred only)The forms duely filled can be sent by mail to:
brahminshoroscopeexchange@gmail.com
or by post to
Hema Rajagopalan,
Site no.1 Cape Neem Lands,
Vilankurichi Road,
Near Sengaliappan Nagar
Peelamedu, Coimbatore-641 004
The charges of Rs. 200/- for publishing can be be paid by Money Order in favour of Hema Rajagopalan at the above address
We have lifted the restriction of the duration of 6 months of keeping the biodata and horoscopes and as such the biodata and horoscopes of all boys and girls from September 2010 are now online.
We shall remove the biodata and horoscope of persons for whom marriage is settled once we receive communication from them.
Those who got married and are getting married Please intimate us by mail. We shall only be happy to hear that.
with best regards,
AKROur Astrologer:
Mrs. Gayathri Balasubramanian, AstrologerNo 43, Ground floor, Devaraj Nagar,
Second Main Road, Shollinganallur,
Chennai-600119
Phone: 044-24500425
Mobile: 99432-22022, 98946-66048, 94875-62022
இல்லறம் என்பது நல்லறமாகும்
அன்பு நண்பர்களே,
சொர்க்கத்தில் ஏற்படும் நிகழ்வுகளில் பிராமணர்களுக்கு உரிய இடம் தற்போது சொற்பமாகிக் கொண்டு வருவதுபோலத் தோன்றுகிறது. சொர்க்கத்தில் திருமணங்கள் நிச்சியக்கப்படுகின்றன என்ற வாக்கின்படி பார்த்தால் பிராமணப் பையன்களின் திருமணங்கள் நிச்சயக்கப்படாமல் நீண்டுகொண்டு போவதையே நாம் மேற்சொன்னவாறு குறிப்பிட்டோம்.
கலப்புத் திருமண அத்துமீறல்களை செய்யாமல், கட்டுப்பாட்டுடன் கல்யாண விஷயங்களில் பொறுமை காக்கும் நம் குல கட்டைப் பிரம்மச்சாரிகளை நாம் முதற்கண் போற்றுகிறோம். பாரம்பரிய கல்யாண விஷயங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டுள்ள நம் அம்பிகளுக்குக் காலா காலத்தில் கல்யாணம் செய்து வைப்பது நம் அனைவரின் கடமையாகும்.
படித்து முடித்து நல்ல பதவியில் இருந்தாலும், படிப்பே இல்லாமல் ஏதோ பல தொழில்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதித்தாலும், பெண் கொடுப்பதற்கு எவருமில்லை என்ற சூழ்நிலையில் துடிப்பான நம் குல கண்மணிகள் மனம் வெடித்து விரக்தியில் விம்முகின்ற விபரீதங்கள், நம் கண்முன்னே எப்போதும் தெரிகின்ற காட்சிகளாய் விளங்குகின்றன.
இச்சூழ்நிலையை மாற்ற நம்மால் முடிந்ததைத் தயங்காமல் செய்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ‘பிராமின் டுடே’ Brahmin Today இதழில் கைத்தலம் பற்ற பகுதி வெளியிடப்படுகிறது. மேலும் மேலும் ஜாதகங்கள் மற்றும் திருமண குறிப்புகள் வெளியிடப்படுவதின் மூலம்தான் நம் சமூக திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவது சாத்தியமாகும். பையன்களின் ஜாதகங்கள் பல பத்திரிகைகளில் வெளி வருவதும் ஆங்காங்கு நடத்தப்படும் சுயம்வரம், பெற்றோர்கள் சந்திப்பு மூலம்தான் திருமணத் தொடர்புகளை வலுப்படுத்த முடியும்.
மிகவும் அத்தியாவசியமான இந்த சேவையின் மேன்மை கருதாது, ‘பணம் சம்பாதிக்கும் ஒரு எளிய வழியாக’ இத்துறையில் உள்ள பலர் சிக்கலை மேலும் பெரிதாக்குகிறார்கள். “1000 ரூபாய் கொடுத்துப் பதிவு செய்து கொள்ளுங்கள், 500 ரூபாய் கொடுத்தால் அருமையான பெண்ணை மணமுடித்துத் தருகிறோம்” என்றெல்லாம் பேசி, ஏமாற்றும் இடைத்தரகர்கள் ஏராளம் உள்ள இக்காலச் சூழ்நிலையில், ஜாதகப் பரிவர்த்தனை மட்டுமே செய்துவரும் பல நல்ல அமைப்புகளும் உள்ளன என்பது நமக்கு நிறைவைத் தரும் நல்ல செய்தி.
மகாலிங்கபுரம் பிள்ளையார் கோயில் சாய் சங்கரா, பரிவர்த்தனை, போன்ற சென்னை அமைப்புகளுடன் இச்சேவையைச் செய்துவந்த வரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கரா மட் என்ற பொதுஜன ஜாதகப் பரிவர்த்தனை, பெற்றோர் சந்திப்பு அமைப்பை நடத்தி வந்தவரும் ஆன திரு. T.A. கோபால் அவர்கள் பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கப்பட்டது ப்ராம்மணர் ஜாதக பரிவர்த்தனை ஆகும்.
காஞ்சி மாமுனிவர்களின் பேரன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான திரு. கோபால் அவர்கள், சுவாமிகளின் விருப்பப்படி இந்தச் சத் காரியத்தை 21 வருடங்களாகச் செய்து வந்தார். பிராமணர்களின் பிரிவுகளில் எவ்வித வேறுபாடும் காட்டாது, அய்யர், அய்யங்கார், தெலுங்கு, கன்னட மாத்வா, மராட்டி, கொங்கனி பிராமணர்கள் மற்றும் குருக்கள், அர்ச்சகர்கள் ஆகிய அனைத்துப் பிரிவு வரன், வதுக்களின் ஜாதகங்களைப் பெற்று மாதம் ஒருமுறை பெற்றோர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அந்நிகழ்ச்சியில் அவ்வித ஜாதகக் குறிப்புப் பட்டியல்களை வழங்கி வந்தார். சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், பெங்களூர், கோயமுத்தூர், சேலம், திருவனந்தபுரம் (விரைவில் மும்பை) போன்ற பல்வேறு இடங்களிலும் மாதந்தோறும் இச் சேவையை நடத்திவரும் பரோபகாரி கோபால் அவர்கள் இச்சேவைக்காகப் பெற்றோர்களிடம் ஒரே ஒரு முறை வசூலித்த கட்டணம் ரூ. 300/- மட்டுமே.
18.11.2010 அன்று திரு கோபால் இறைவனடி சேர்ந்த பின்னர் அவருடன் பணியாற்றியவர்களால் சென்ற மாதம் வரை பெற்றோர் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. தவிர்க்க முடியாத காரணாத்தால் இப்பெற்றோர் சந்திப்பு தொடர்ந்து நடத்து முடியாத சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து. இச்சேவையை இணைய தளத்தின் வழியாக மட்டும் தொடர்வதாக முடிவு செய்துள்ளோம். அத்துடன் கட்டணத்தை ரூ 200/- ஆகக் குறைத்துள்ளோம்.
முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் இத்தளத்துக்குத் தங்களுடைய தொடர்ந்த ஆதரவை வேண்டுகிறோம். தங்கள் குடும்பத்தார் மட்டுமின்றி, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் இச்செய்தியைத் தெரிவித்து அதிகப்படியானோர் பயன்பெற உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன் ஆகிரா
ஒருவரது சுய விவரங்களை ஜாதகத்துடன் பிரசுரிக்க பெற்றோர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ. 200/- மட்டுமே.
Contact one of our collection centers.




